முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள்

மே தினம்

ஒரு தீபாவளி போல்
புத்தாண்டு போல்
ஒரு நாள் விடுமுறை களிப்பில் கரைந்து போகும் நாளா மேதினம் 

நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டி
சிறப்பு திரைப்படம் 
பட்டி மன்றம் 
குத்துப்பாட்டு கும்மாளம்
என டிவி முன்
கடந்து போகும்
வழக்கமான பண்டிகை
போன்றதா மே தினம்

டாஸ்மாக் பார்களில்
நண்பர்களோடு
மயங்கிக் களிக்கவா
இந்த மே தினம்

திங்கட்கிழமையில் வந்ததால்
சனி ஞாயிறையும் சேர்த்து
மூன்று நாள் சுற்றுலாத் திட்டத்தில்
அடங்கிப் போகும் 
எளிய கேளிக்கை தகுதியுடையதா அது

சினிமா தியேட்டரிலும்
ஷாப்பிங் மால்களிலும் கூடி
மாலையில் KFC யில்
கோழிக்கால் கடிக்கும்
குதூகலத்திற்கு
கிடைத்த வாய்ப்பா மே நாள் விடுமுறை 

ஒரு புத்தாண்டைப் போல்
பரஸ்பரம்
Happy may day சொல்லி
கடக்கவா இந்நாள்

உழைக்கும் மக்கள்
சிந்திய உதிரத்தில்
உதித்த தினமல்லவா இந்த மே தினம்

அதில் தோய்ந்து
உலகெங்கும் பறக்கும்
செங்கொடியில் அதன்
ரத்தக் கவிச்சி
இன்னுமல்லவா இருக்கிறது

அது நமது
சென்ற நூற்றாண்டு
பாட்டன்கள் பாட்டிகள்
உயிர் மாய்ந்து 
சிக்காகோ நகர வீதிகளில்
சிந்திய உதிரமல்லவா 

8 மணி நேர வேலை
8 மணி நேர ஓய்வு
8 மணி நேர உறக்கம் என
நமக்கும் சேர்த்து
போராடிப் பெற்ற உரிமையது

எட்டாக் கனியாகவல்லவா
இன்றும் அது இருக்கிறது 

உழைப்போர் உரிமை காக்க
இயற்கை வளம் காக்க
விவசாயி நலன் காக்க
உலகமய ஏகாதிபத்தியம் எதிர்க்க
பாசிஸ வெறி எதிர்க்க
சபதமெடுப்போம்

டெல்லியின் வீதிகளை
சிக்காகோவாக்க
சிவப்பாய் சிந்திப்போம்
உவப்பாய் உயர்த்துவோம் தோள்களை
சபதம் ஏற்போம் இந்நாளில்
பாசிசத்துக்கு பரிசாய்
சாவைத் தருவோம்

அதற்கு
மார்க்சும் ஏங்கெல்ஸ்சும்
லெனினும் ஸ்டாலினும்
நமக்குத் துணை நிற்பார்கள்

"இழப்பதற்கு ஒன்றுமில்லை
அடிமைச் சங்கிலியைத் தவிர
அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு "

புரட்சிகர மேதின நல்வாழ்த்துகள் 😊😊😊

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...